tamilnadu

img

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வரிச்சட்டத் திருத்தம் மிகப்பெரும் அடி

பினராயி விஜயன் எதிர்ப்பு

திருவனந்தபுரம், பிப்.6 - வெளிநாடுவாழ் இந்தியர்கள் மீது திட்டமிடப்பட்டிருக்கும் வரி விதிப்பு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மீது தொடுக்கப் பட்டிருக்கும் மோசமான தாக்குதல் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி யுள்ளார். வருமான வரிச் சட்டத்தின் 6 ஆம் பிரிவு, ஒரு தனிநபருடைய குடியிருப்பு நிலைக்கான விதிகளை வரையறுக்கிறது. பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா, இந்த விதிகளைத் திருத்த முயல்கிறது. இது வெளி நாடுவாழ் இந்தியர்கள் மீது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தற்போது, இந்தியக் குடிமக்கள் அல்லது இந்தியாவில் பிறந்தவர்கள், நாட்டில் ஆண்டுக்கு 182 நாட்களோ அல்லது அதற்கு மேலோ வாழ்ந்தால் இந்தியாவில் குடி யிருக்கும் நபர்களாகக் கருதப்படுகிறார்கள். தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் திருத்தம் இந்தக் கால அளவை 120 நாட்களாகக் குறைக் கிறது. நடைமுறையில், ஒவ்வொரு இந்தியரும், அவர் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் வரி கட்டியாக வேண்டும். என்றாலும், வெளி நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு, 182 நாட்கள் என்ற கால அளவின் அடிப் படையில் வரி கட்டுவதில் இருந்து விலக்கு கிடைத்தது. இனி இந்தப் புதிய திருத்தம் அந்த விலக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.   இந்தத் திருத்தம் வரி ஏய்ப்பைக் கட்டுப் படுத்த உதவும் என்று  நிதி மசோதா விளக்கம் அளித்தாலும், வரிச் சட்டத்தைப் பின்பற்று பவர்களைத்தான் இந்தத் திருத்தம் கடுமை யாகப் பாதிக்கும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும், வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியர்கள், குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக இந்தியா வந்து செல்கிறார்கள். வரி நோக்கத் துக்காக 182 நாட்களை 120 நாட்களாகக் குறைப் பது என்பது, வெளிநாடுவாழ் இந்தியர் களுடைய சொந்த-ஊர் உறவுகளுக்கும், பொறு ப்புகளுக்கும் நிர்ணயிக்கப்படும் அளவாக இருக்கிறது.

எண்ணெய்க் கம்பெனிகளில், வணிகக் கப்பல்களில், எண்ணெய்க் கிணறுகளில் வேலைபார்க்கும் இந்தியர்கள் கடுமையான பணிச் சூழலின் காரணமாக ஆண்டுக்கு 120 நாட்களுக்கு மேல் விடுப்பு பெற்றுவரும் சூழலில், இந்தப் புதிய திருத்தம் கவலை அளிப்பதாக உள்ளது. தவிர்க்கமுடியாத சூழ லால் அதிக காலம் வீட்டில் இருக்க வேண்டி யவர்களும் இதே காரணத்தால் பாதிக்கப்படு வார்கள். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தளர்வான விதிகளை வெட்டுவது என்பது, அவர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும். முன்மொழியப்பட்டுள்ள இன்னொரு திருத்தத்தின்படி, குடியிருப்பு/வாழ்விடம் ஆகிய காரணங்களால், எந்தவொரு நாட்டிலும், அல்லது எந்தவொரு பிரதேசத்திலும் வரி செலுத்தத் தேவையில்லாத இந்தியக் குடிமக்கள் இந்தியாவில் வரி செலுத்தியாக வேண்டும். வரி ஏய்ப்பைக் கண்காணித்து சமூக நலத்திட்டங்களுக்கு நிதிகளைப் பயன் படுத்துவது என்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய செயல். என்றாலும், இந்த முன்மொழி வால், மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் குறைந்த வருவாய் வரம்புக்குள் வரக்கூடிய தொழிலாளர்கள் மிகக் கடுமை யாகப் பாதிக்கப்படுவார்கள்.

தங்களுடைய கடுமையான உழைப்பில் இருந்து வீட்டுக்குப் பணம் அனுப்பும் மக்களை, அரசாங்கம், துயரத்தில் ஆழ்த்தக்கூடாது. கேரளாவில், வெளிநாடுவாழ் மலையாளிகள் அனுப்பும் பணம் பொருளாதாரத்தில் மிக  முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் திருத்தம்,  சந்தேகமின்றி, கேரள மாநிலத்தின் பொரு ளாதாரத்தை நொறுக்கும் செயல். வரி ஏய்ப்பைக் கண்காணிப்பதற்கானது என்று சொல்லப்படும் இந்தத் திருத்தங்கள், உண்மையில் வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து, வெளிநாட்டுப் பணத்தை வீட்டுக்கு அனுப்பும் சாதாரண மக்களை நசுக்கும் செயல். எனவே மத்திய அரசு, இந்த முன்மொழிவு களைக் கைவிட வேண்டும். இவ்வாறு கேரள முதல்வர் தெரி வித்துள்ளார்.

 நர்மதா
நன்றி : தி நியூஸ் மினிட்