சென்னை,நவ.15- நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கினார். கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி சென்னை கலை வாணர் அரங்கில் திரைத் துறையை சார்ந்தவர்களுக்கு கலைமாமணி விருது வழங் கப்பட்டது. அதில் தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர் விஜய்சேதுபதி, சந்தா னம், கவிஞர் யுகபாரதி, பின்னணி பாடகி ஜானகி ஆகி யோர் விருதை பெறுவதற்கு வர முடியவில்லை. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் கவிஞர் யுகபார திக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டி யராஜன் கலைமாமணி விருதை வழங்கினார். நடிகர் சந்தானம் சார்பில் அவரது மேலாளரும், பின்னணி பாடகி ஜானகி சார்பாக அவ ரது மகனும் கலைமாமணி விருதை பெற்றுக் கொண்ட னர்.