திருவனந்தபுரம், மே 6- வெளிநாடுகளில் உள்ள இந்தி யர்களை கோவிட் பரிசோதனைக்கு உட் படுத்தாமல் அழைத்து வருவது ஆபத்தா னது என கேரள முதல்வர் பினராயி விஜ யன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளார். விமானங்களில் சுமார் 200 பேர் வரை பயணிப்பார்கள். அதில் ஒன்றிரண்டு பேருக்கு கோவிட் நோய் இருந்தால் அது விமானத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும். இது நாடு முழுவதும் நோய் பரவ காரணமாகிவிடும் என செவ்வா யன்று மாலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் தெரிவித்தார். அவர் கள் பயணத்தை தொடங்குவற்கு முன்பே கோவிட் பரிசோதனை நடத்தப்பட வேண் டும் என பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக வும் அவர் கூறினார்.
கேரளத்தில் மட்டுமல்ல, நாடு முழு வதும் நோய் பரவல் அதிகரிக்க மத்திய அரசின் தற்போதைய முடிவு காரணமாகி விடும். வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருவோருக்காக முறையான ஏற்பாடு களை கேரளம் செய்துள்ளது. உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள வழி முறைகளில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. வெளிநாடுகளில் உள்ள வர்கள் திரும்பி வருவது அவசியமா னது. ஆனால், கோவிட்டை தடுப்பது என்கிற நிலைபாட்டில் மாற்றமில்லை என அவர் தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கைகளை மீறுவது கெடுசெயலா கும். ஏற்கனவே ஈரானிலிருந்தும் இத் தாலியிலிருந்தும் வந்தவர்களை இந்திய மருத்துவக்குழு அங்கு சென்று பரி சோதனை செய்தது. விமான பயணம் வைரஸ் பரவும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
கோரிக்கை ஏற்பு
கேரள முதல்வரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு செவ்வாயன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் வெளிநாடுகளிலிருந்து பயணத்தை தொடங்கும் முன்பு இந்தியர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.