tamilnadu

img

இந்தியா ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தம்...

மும்பை, மே 28-ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதால், இன்டிகோ எனப்படும் இன்டர்குளோப் ஏவியேசன் விமான நிறுவனத்தின் லாபம் 4வது காலாண்டில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஊழியர்களின் சம்பள பாக்கி, நிதி நெருக்கடி ஆகியவற்றால், கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி முதல், தனது விமானசேவைகளை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் பெற்ற 8 ஆயிரத்து 200 கோடிரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. முழுமையாக செயலிழந்து நிற்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்கும் திட்டங்களில், எஸ்.பி.ஐ தலைமையிலான வங்கிக் குழு ஈடுபட்டிருக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை ஏலம் விட்டுநிதி திரட்ட, எஸ்.பி.ஐ தலைமையிலான குழு முடிவு செய்தது.தனியார் நிதி நிறுவனமான டிபிஜி கேப்பிட்டல், இண்டிகோ பார்ட்னர்ஸ், நிஃப், எட்டிஹாட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க இசைவளித்து, ஏலம் கோரியுள்ளன. ஏலத்தில் எடுக்கும் அளவிற்குஜெட் ஏர்வேஸ் நிறுவன சொத்து மதிப்பு இல்லாததும், விமானிகள் உட்பட ஊழியர்கள், போட்டி நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துவிட்டதாலும், சேவை உரிமம் காலாவதியாகிவிட்டதாலும், ஏலத்தில் பங்கேற்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவைகளைநிறுத்தியுள்ளதால் இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள்ஆதாயம் அடைந்தன. இரு நிறுவனங்களும் சில வழித்தடங்களில் கட்டணத்தையும் உயர்த்தின. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4வது காலாண்டில் இன்டிகோவின் லாபம் 590 கோடிரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் லாபம் 118 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதிஆண்டில் இன்டிகோவிற்கான பயணிகள் எண்ணிக்கை 30 சதவிதம் அதிகரிக்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.