tamilnadu

img

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை

சென்னை,அக்.11- தமிழகத்தில் ஆவடி மற்றும் மேட்டூரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 6.50  லட்சம் ரொக்கப் பணமும் முக்கிய ஆவணங்க ளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த ஆவடி புதிய ராணுவ சாலையில் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள முன்னாள் நகராட்சி அலுவலக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில்  தனி வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வரு கிறது. இங்கு பணி புரிந்து வரும் தனி வட்டாட்சி யர் ஸ்ரீதர் பொதுமக்களுக்கு பட்டா வழங்கு வதில் ஒரு பட்டாவிற்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாக லஞ்ச  ஒழிப்பு காவல்துறைக்கு புகார் கிடைத்துள் ளது. இதனடிப்படையில், ஆலந்தூர் லஞ்ச  ஒழிப்பு டிஎஸ்பி குமரகுரு தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். நள்ளிரவு  ஒரு மணி வரை நீடித்த இந்த சோதனையின்  போது ஸ்ரீதரின் காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும், ரூ. 2 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத ஆவணங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான  விசாரணையில் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள் உறுதி செய்யப்  பட்டால் தனி வட்டாட்சியர் கைது  செய்யப்படுவது உறுதி என காவல்துறை யினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அந்த அலுவலகத்தில் உதவிக்கு பணியமர்த்திய 2 பெண்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான விசார ணையும் நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் பொது நிதியிலிருந்து சுமார் ரூ. 3 கோடிக்கான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக அளவில்  லஞ்சம் கேட்பதாகவும், வாங்குவதாகவும் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை  அடுத்து அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு காவ லர்கள் அங்கிருந்த அரசு ஊழியர்கள் மற்றும்  ஒப்பந்ததாரர்கள் என 13 பேரிடம் இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது யாரும் கைது  செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கிருந்து கணக்கில் வராத பணம்  மட்டும் சுமார் ரூ. 5 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.