tamilnadu

img

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுதில்லி,ஜூன் 5-  மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வு முடிவுகளை  தேசிய தேர்வு முகமை புதனன்று மாலை வெளி யிட்டது நாடு முழுவதும் தேர்வு எழுதி யவர்களில் 56.27ரூ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம்5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர்விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்,  14லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில், புதனன்று  றறற.வேய.யஉ.in, றறற.வேயநேநவ.niஉ.in  என்றஇணையதளத்தில் நீட் நுழைவு தேர்வுக்கான முடிவுகளை  தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில்  நீட் தேர்வு எழுதிய வர்களில் 45,336 பேர் (48.57ரூ) மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடை 9.01ரூ சதவீதம் அதிகரித்துள் ளது. முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் இடம் பெறவில்லை. முதல் 50 இடங்களில் தில்லி, ராஜஸ்தா னைச் சேர்ந்த  மாணவ, மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேசியஅளவில் ராஜஸ்தானை சேர்ந்த நளின் கந்தல்வால் என்ற மாணவர் 720 மதிப்பெண்ணுக்கு 701 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தேசியஅளவில் 57-வதுஇடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்தும், மாணவிகள் பிரிவில் 10-வது இடத்தையும் பிடித்துள்ளார்.  மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தமிழக மாணவர் கார்வண்ணபிரபு 575 மதிப்பெண்கள் பெற்று 5-வது இடத்தைப் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனாஎன்ற மாணவி 676 மதிப்பெண் பெற்று தேசியஅளவில் 12-வது இடம் பிடித்தார்.