முழுபெரும்பாண்மையுடன் பொறுப்பேற்றுள்ள பாஜக கூட்டணி அரசு கடந்த 100 நாட்களில் மிகப்பெரிய சாதனைகள் செய்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறது.``மாற்றம் ஒன்றே மாறாதது`` என்ற காரல்மார்க்ஸ் சிந்தனை நிரூபித்துள்ளது. இந்தியநாட்டில் உள்ள 130 கோடிமக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை. மாறாக உள்நாட்டு, வெளிநாட்டு, கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் மதவெறி பிடித்த இந்துத்துவா பிற்போக்காள ருக்குத்தான் மாற்றம் என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளது.ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வருகின்ற 2020 - 2024 ஆண்டுக்குள் உச்சகட்ட உள் கட்டமைப்பு வசதி களை மேம்படுத்திட 100 லட்சம் கோடி ரூபாய் செல விடப்படும் என கூறியது. விவசாயிகள் பிரச்சனை சம்மந்தமான கஸ்தூரி ரங்கன் அறிக்கையை விவா திக்காத மோடி அரசு விவ சாயிகளின் விலைபொருட்க ளின் லாபம் இரட்டிப்பு ஆக்க ப்படும் என்று கூறுகிறது. இதற்குத் தேவையான நிதி எங்கே? நிதி ஆதாரம் எங்கே? பெரியதாக தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்திய ஜி.எஸ்.டி.வரி கடந்த ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் வரிவசூல் 98 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துவிட்டது. சரிந்துவரும் பொருளாதாரத்தை சரிகட்ட பிரதமர் நரேந்திரமோடி அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் நிதியை வாங்க பல நெருக்குதல்கள் மற்றும் தில்லு முல்லுகள் செய்தார்கள். முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம்ராஜன், ஊர்ஜித்பட்டேல் ஆகியோரை நிர்பந்தப்படு த்தி வெளியேதள்ளிய பின்னர்தான் ஆர்.பி.ஐ.யிடமிருந்து ரூ.1,76,000 கோடியைசட்டத்திற்கு சம்பிரதாயத்திற்கு மாறாக வாங்கினார்கள். மத்தியஅரசு, இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அவசரமாக நிதிபெற வேண்டுமானால் நாட்டில் இயற்கை சீற்றத்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது நாட்டில் போர் நடந்து கடுமையானபாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே மேற்கண்ட நிதியை பெறலாம் என்பது உண்மை நிலை. இன்றைய நிலையில் ரிசர்வ் வங்கியிடம் பெற்ற பணம் ரூ.1,76,000 லட்சம் கோடி ஆதாரப் பணத்தை அரசு எவ்வாறு செயல்படுத்துவது, வீழ்ந்த பொருளா தாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதற்கான சரியான திட்டமிடவில்லை என்று தெளிவாக தெரிகிறது. 2019 - 2020 தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை பல்வேறு நடவடிக்கைகள் பொருளாதாரம் சரிந்தவுடன் விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு சரியான திட்டமிடல் இல்லை, தொலைநோக்கு பார்வை இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது எனமறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் தனிச் செயலாளரும் விஞ்ஞானியுமானபொன்ராஜியின் கருத்து. இன்றைய தொழில்துறை இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுகுறுந் தொழில்துறையே (எம்.எஸ்.எம்.இ.) 75 விழுக்காட்டிற்குமேல் வேலை வாய்ப்பைத் தருகின்ற சிறப்பான துறை யாகும். உண்மை நிலையை நாங்கள் சொல்வதைவிட இன்றைக்கு ஆர்.பி.ஐ. வங்கியில் இயக்குனராக உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி பல்வேறு கருத்தரங்களில் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தொழில்துறைக்கு அடித்தளமே சிறு, குறுந் தொழில் துறைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியிடம் பெற்றநிதி ரூ. 1,76,000 லட்சம் கோடியை செலவிட அரசின் திட்டம் என்ன? என்று பல பொருளா தார நிபுணர்கள், இடதுசாரிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், நிதிய மைச்சர் ஏற்றுமதியாளருக்கு 50,000 கோடி யும், கட்டுமானத்துறைக்கு 20,000 கோடியும் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்றுமதி பொருட்களின் மீதான வரி விகிதம் குறைக்கப்படும், ஏற்றுமதி செய்ய ப்படும் பொருட்களுக்கான காப்பீடு விகிதம் உயர்த்தப்படும். இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,700 கோடி வீதம் கூடுதல் செலவாகும் என நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்துள்ளார். அன்றும் இன்றும் பாதுகாப்பற்ற நிலை யில், அழிந்துகொண்டியிருக்கின்ற சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விற்பனை திருவிழாநடத்தும் என்று மட்டுமே அறிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் சிறு, குறுந் தொழில்துறை யை பாதுக்காத்திடவும், வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லவும் பிரதமர் மோடியின் திட்டம் இதுதானா. நாட்டில் உள்ள இளைஞர்களும், விவசாயிகளும், விவசாயக் கூலிகளும், அமைப்புசாரா அனைத்து தொழிலா ளர்களும் தொழில் முனைவோர்களும், இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து எப்படி மீளப் போகி றார்கள் என்ற உண்மைநிலையை புரிந்த நாட்டின்மக்களும், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகளும் கவலை அடைந்து ள்ளனர். மேற்கண்ட நிலைக்கு காரணம் பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் ஜி.எஸ்.டி. பைலிங் சிஸ்டம் போன்ற வையே. இன்றைக்கு சிறு, குறுந்தொழில் நிறுவனங்களை மிரட்டும் என்.பி.ஏ. என்ற சர்ஸ்பாசி ஆக்ட் (சட்டம்) காரணமாக பல சிறு,குறுந் தொழில் நிறுவனங்கள் முடப்படுவதும், ஒருபுறம். சிறு,குறுந் தொழில் நிறுவனங்கள் செய்து தந்த ஜாப் ஆர்டர்கள் உதிரிபாகங்களுக்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடமாகியும் பணம் தராத நிலை நீடிக்கிறது. பணம் பட்டுவாடாசெய்யாத நிலையை அரசு தரப்பும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பணம் வழங்காததை அரசு தரப்பில் இதுவரை கண்டுகொள்ள வில்லை. வங்கியில் கடன் கட்டவில்லை என்றால் என்.வி.ஏ. என்ற சர்ஸ்பாசி சட்டம் பாயும் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலை உள்ளது. ஜாப் ஆர்டர் (உதிரிபாகம்) செய்துதரும் சிறு,குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தர வேண்டிய பணம் குறைந்தது 45 நாட்களுக்குள் தர வேண்டும் என்று மத்தியரசு சட்டம் இயற்றுமா? அசோக்லேலாண்ட்நிறு வனம் பிற மாநிலங்களில் உள்ள தனது ஐந்து கிளை களையும், ஹூ`ண்டாய், மாருதி சுசுக்கி, டாடா, மகேந்திரா போன்ற பல்வேறு மிகப் பெரிய நிறுவனங்கள் நாடுமுழுக்க பணி நிறுத்தம் என்ற பெயரில் வாராகணக்கில், மாதக்கணக்கில் மூடி வருகின்றனர். மேற்கண்டநிறுவனங்களை அடித்தளமாக நம்பியே இயங்குகின்ற சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் இதன் காரணமாக தொடர்ந்து மூடும் பாதுக்காப்பற்ற நிலைஉருவாகியுள்ளது. இதன் விளைவாக மேற்கண்ட நிறு வனங்களில் பணி புரிந்து வரும் லட்சக்கணக்கானதொழிலாளர்களும்,தொழில் முனைவோர்களின் குடும்பங்களும் ஏழ்மை நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகள் உதவி இல்லாமல் சொந்த முயற்சியாளும் தனியாரிடம் கந்து வட்டிக்கு கடன் பெற்றும், தன்னிடமுள்ள நகைகளை விற்றும், ஏற்கனவே பணிபுரிந்த கம்பெனிகளில் கிடைத்த சர்வீஸ் பணத்தை மூலதனமாக வைத்து சுயமாக உருவானதுதான் சிறு,குறுந் தொழில் நிறுவனங்கள். இந்நிறுவனங்களின் அழிவை தடுத்து பாதுக்காத்திடவும், வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்ல மத்திய, மாநில அரசுகள் கீழ்க்கண்ட சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம். சிறுகுறுந் தொழில் நிறுவனங்கள்பெரி தும் பாதிக்கப்பட்டது மத்திய மோடி அரசுக் கொண்டுவந்த பண மதிப்பு இழப்பு சட்டம்தான் காரணம். இதனால் நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வேலை பறிபோனது என்று இந்திய முதலாளிகளின் சங்கங்களான சி.ஐ.ஐ., எப்.ஏ.எஸ்.ஐ.ஐ.இ,இ எப்.ஐ.எஸ்.எம்., எப்.ஐ.சி.சி.ஐ., இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ்;, ஆல் இந்தியாகான்பெடரேசன் ஆப் ஸ்மால் அண்டுமைக்ரோ இண்டஸ்ட்ரிஸ் தனது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி 18 விழுக்காடு என்பதை 5 விழுக்காடாக குறைத்திடவேண்டும. அல்லது முழுமை யாக ரத்து செய்ய வேண்டும். சர்பாசி சட்டத்தை திரும்ப பெற்று, அரசாங்கம் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் சிறுகுறுந் தொழில் நிறுவனங்களுக்கு தரவேண்டிய பணத்தை 45 நாட்களுக்கு தர சட்டம் இயற்ற வேண்டும். ஜாப் ஆர்டர் தருகிற அரசுதனியார் நிறுவனங்கள் குறைந்தது 30 விழுக்காடு ஜாப் ஆர்டரை குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். 4.4 விழுக்காடு ஜாப் ஆர்டர்களை எஸ்சி. எஸ்.டி பிரிவினர் நடத்தும் நிறு வனங்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும். அரசு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர் தரும் போது அதற்கான ரேட் (கூலி) ஒரளவு கட்டுப்படியாகிறது. ஆனால், தனியார் துறை நிறுவனங்கள் நியாய மான ரேட்டை வழங்குவதற்கான முறை அமல்படுத்த முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். சிறுகுறுந் தொழில் நிறுவனங்கள் 80 சதவீதத்திற்கு மேல் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்துகிறார்கள். இதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தொழில் நிறைந்த பகுதிகளில் தொழிற்பேட்டை ஏற்படுத்திட வேண்டும். அதில் 75 சதவீத மானிய விலையில் தொழிற்கூடங்களை நிறுவிடவும் அதில் 40 சதவீதம் குறுந்தொழில் முனை வோர்க்கே வழங்கிட வேண்டும். நலிந்த நிறுவங்களுக்கு வங்கிகள் முதலீடு குறைந்த வட்டியில் தரவேண்டும். பிணை இல்லாக் கடன் குறுந் தொழிகளுக்கு வழங்கப்படவேண்டும். மேற்கண்ட நிறுவனங்களை நடத்தும் குறுந்தொழில் முனைவோர், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எப்., மருந்துவ வசதி, இயற்கையான மரணம், விபத்து மரணம் போன்றவைகளுக்கு சட்டப்படி இழப்பீடுதர வேண்டும். மேற்கண்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர், குறுந்தொழில் முனைவோர்களுக்கு வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட்டில் சிறு,குறுந் தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பிற்காக குறைந்தது ரூ.1,000 கோடிஒதுக்கீடு செய்ய வேண்டும்.
(தலைவர்- தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்)