tamilnadu

img

இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கு... சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவு

சென்னை:
இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வுகாண சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 42 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள கட்டிடத்தை தனது ஒலிப்பதிவுக் கூடமாக இளையராஜா பயன்படுத்தி வந்துள்ளார். இந் நிலையில் அண்மையில் அந்த கட்டிடம் மூடப்பட்டது.பிரசாத் ஸ்டூடியோவில் தனது இடத்திற்கான உரிமைக்கு போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம்எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க வில்லை. வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது இரு தரப்பினரும் சமரசமாக தீர்வு காணும்வகையில் வழக்கை சமரச தீர்வு மையத் திற்கு அனுப்பி வைத்து நீதிபதி உத்தர விட்டார்.

;