வியட்நாம் சோசலிசக் குடியரசின் தலைநகர் ஹனாயில் அக்டோபர் 9 முதல் 11 வரை சர்வதேச கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆசிய - பசிபிக் பிராந்திய கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, வங்கதேசம், வியட்நாம் மற்றும் கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சைப்ரஸ் ஆகிய நாடுகளிலி ருந்து 44 பேர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் சுக்பீர்சிங், உதவி தலை வர்கள் ஆர்.சிங்காரவேலு (கட்டுரையாளர்) திபெஞ்சன் சக்ரவர்த்தி, கோத்தம் ராஜு ஆகியோரும், அகில இந்திய கட்டிட கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு (AICOCW-AITUC) சார்பில் தலைவர் விஜயன் குனிசேரி, பொருளாளர் செல்வராஜ் உட்பட 4 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர். வியட்நாம் தேசிய கட்டிட தொழிலாளர் சங்கத்தின் (VNUOW) தலைவர் குயேன் திதூலே ஆற்றிய வரவேற்பு ரையில் கூறியதாவது:- வியட்நாமின் 2 லட்சம் உறுப்பினர் கொண்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், வியட்நாம் விடுதலையின் 65வது ஆண்டு கொண்டாடப்படு கிற இத்தருணத்தில் வருகை புரிந்துள்ள வெளிநாட்டுப் பிரதி நிதிகளை வரவேற்கிறேன். வியட்நாமின் தேசிய தொழிற் சங்கம் (VGCL) அமைக்கப்பட்டு 62 ஆண்டு ஆகிறது. அதனு டன் இணைந்த சங்கம்தான் கட்டிடத் தொழிலாளர் சங்கம். வியட்நாம் விடுதலை மற்றும் வியட்நாமை ஒன்றுபடுத்திய போராட்டங்களிலும், சோசலிச கட்டமைப்புப் பணிகளிலும், வியட்நாம் கட்டிட சங்கம் அரும்பணி ஆற்றிவருகிறது. 1975 முதல் கூட்டமைப்புடன் இணைந்தும் செயலாற்றுகிறது என்றார்.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மிகாலிஸ் விரிவான துவக்கவுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- 1975 ஏப்ரல் 30ல் அமெரிக்க ஏகாதிபத்தியம் முறியடிக்கப் பட்டு, வியட்நாமிலிருந்து துரத்தப்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் இணைந்தது. இன்றைக்கும் பல்வேறு நாடுகளின் மீது ஏகாதிபத்தியம் தனது லாப வெறிக்காக, தொடர்ந்து யுத்தம் தொடுத்து வருகிறது. டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பிறகு, சுற்றுச்சூழல், பருவநிலை பாதுகாப்பு பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார். ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு எதிராக, பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப வெறிக்கு எதிராக சர்வதேச தொழிலா ளர்களும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலில் பெண்கள் அன்ஸ்கில்டு பணிக ளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணியிடங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள். பெண் தொழிலாளர்க ளின் திறமைகளை வளர்த்திட, பயிற்சி அளித்திட அரசை வற்புறுத்த வேண்டும். வெளிநாட்டுத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழி லாளர்களுக்கு நீதி, சம உரிமை கிடைத்திட நம் சங்கங்கள் தலையிடவேண்டும். உலகில் மொத்த தொழி லாளர்களில் 5-10 சதவீதம் மட்டுமே கட்டுமான தொழிலாளர்கள். ஆனால், 17 சதவீதம் விபத்து மரண சம்பவங்கள் கட்டு மான தொழிலில் நிகழ்வதாக ஐ.எல்.ஓ கூறுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு பல நோய்களை தருவிப்பதால், உலக அளவில் அதனை தடை கோர வேண்டும்.
டோக்கியோவில் 2020ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள், 2022ல் கத்தார் நாட்டில் நடைபெறும் உலக கால்பந்து கோப்பைக்கான போட்டிகளுக்காக, பல அதிநவீன ஸ்டேடி யங்கள் உட்பட பல கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு கட்டுமான கம்பெனி களில் அவர்களது லாப வெறிக்காக, பாதுகாப்பு, உடல்நலம் குறித்த நடவடிக்கைகளில் போதுமான கவனம் செலுத்தா ததால் விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று சர்வதேச கால்பந்து சங்க அலுவலகங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு நாம் நடத்திய ஆர்ப்பாட்டங்க ளால் தொழிற்சங்க தலைவர் ஜான் லோபாக்ஸ் விடுதலை யானதும் கூட்டமைப்பின் சாதனைகளில் சில. உலக தொழிற் சங்க சம்மேளனத்தில் ( WFTU) இணைந்துள்ள கூட்ட மைப்பின் அறைகூவல்களையும் அமலாக்கி வருகிறது. நம்பக்கம் நியாயம் இருப்பதால், ஏகாதிபத்தியற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டத்தில், தொழிலாளி வர்க்கமே வெற்றிபெறும்.
உழைக்கும் பெண்கள் நிலை
கட்டுமான பெண் தொழிலாளர் நிலை குறித்து விவாதிக்கப் பட்ட முதல் அமர்விற்கு ஆர்.சிங்காரவேலு தலைமை வகித்தார். இந்தியாவில் பெண் கட்டுமான தொழிலாளர் நிலை குறித்தும், பெண் ஊழியர்கள்/தலைவர்களை உரு வாக்கும் முயற்சிகள் குறித்தும், பல மாநிலங்களிலும், தேச அளவிலும் கட்டுமான பெண்கள் உபகுழு உள்ளதை யும் அவர் குறிப்பிட்டார், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைக ளுக்கு தீர்வுகாண, ஆண் தொழிலாளர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என இரு பாலாரும், மோடி அரசின் பாசிச, நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக ஒற்று மையுடன், சக்திமிக்க போராட்டங்களை நடத்த வேண்டிய தேவைகளையும் அவர் குறிப்பிட்டார். ஜப்பானில் பெண் தொழிலாளர் நிலைபற்றியும், வியட்நாம் பெண் தொழிலாளர் நிலை பற்றியும் இந்தோ னேஷியா- பங்களாதேஷ் தொழிலாளர் நிலை பற்றியும் விவாதங்களில் விளக்கப்பட்டது.
உடல்நலம், பாதுகாப்பு
இந்த அமர்விற்கு இந்தோனேஷியாவின் இபான் இப்ராகீம் தலைமை வசித்தார். இந்தோனேஷியாவில் 2019 செப் 24-30ல் சர்வாதிகார அரசிற்கு எதிராக நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்ட னர். இப்போராட்டத்தில் இந்தோனேஷிய ரெடிமிக்ஸ் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கமும் கலந்து கொண்டது. 10 கோடி ஏழை மக்களின் சொத்தும் நான்கு நபர்களின் சொத்தும் சமம். அந்நிய கடன் சுமை முதலாளிகளின் லாப வெறியில் வளர்ந்துள்ளது. 12 மணி நேரத்திற்கும் மேலான வேலை நேரத்தால், கட்டிட தொழிலில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றன என்றார். ஜப்பானில் மலைகளைக் குடைந்து சுரங்கம் (TUNNEL) அமைக்கும் போது ஏற்படும் தூசியை நுகர்வதால், நிமோ சோனியாசிஸ் என்ற நோய் பரவலாக உள்ளது. உயர்வேக ரயில்கள் செல்ல, எக்ஸ்பிரஸ் ஹைவேஸ் அமைக்க, புதிய டன்னல்கள் அமைக்கப்படுகின்றன. நிலக்கரி மற்றும் உலோகம் சுரங்க விபத்துக்களில் பாதிக்கப்பட்டோ ருக்கு தகுந்த நிவாரணம் பெற 30 ஆண்டுகளாக சங்கம் சட்டரீதியாக போராடி வருகிறது என்று விவாதத்தில் தெரி விக்கப்பட்டது. வியட்நாமில் தொழில் ரீதியிலான உடல் நலக் கோளாறுகள் மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பு குறித்து விரிவான பிரச்சாரத்தை நமது தொழிற்சங்கமும் செய்கிறது. அரசும் சங்கத்துடன் கலந்து சட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்
இந்த அமர்விற்கு ஜப்பானின் யமசாகி மசாட்டோ தலைமை வகித்தார். ஜப்பானில் குழந்தை பிறப்பு குறைந்துள்ளது. அதனால் பல வெளிநாடுகளிலிருந்தும் புலம் பெயந்த தொழிலாளர் ஜப்பானில் குறைந்த ஊதி யத்துடன் பணிபுரிகின்றனர். ஒலிம்பிக் ஸ்டேடிய கட்டுமானப் பணியில் கூடுதல் வேலை நேரம் காரணமாக சில தொழி லாளர்கள் தற்கொலை செய்கின்றனர் என்றார்.
வியட்நாமில் பணிபுரியும் வெளி நாட்டுத் தொழிலாளரின் வீட்டுவசதி, ஊதியம் மற்றும் பணி நிலைமைகளைக் காத்திட நமது சங்கம் தலையிடுகிறது. 40 நாடுகளில் 8,21,862 வியட்நாமிய தொழிலாளர் பணிபுரிகின்றனர். இதில் கட்டுமான தொழில் செய்ய சென்றுள்ளோர் 1,27,628பேர் லாவோஸ் நாட்டின் புனல் மின் நிலைய நிர்மான திட்டங்க ளில் ஆயிரக்கணக்கான வியட்நாமியர் பணிபுரிகின்றனர். சராசரியாக, வெளிநாடுகளில் வேலை செய்ய வியட்நாமிய தொழிலாளர் ஆண்டுக்கு 250 கோடி டாலர் தங்கள் வீடு களுக்கு அனுப்புகின்றனர். நவீன தொழில்நுட்ப மாறு தல்களை உள்வாங்கிக் கொண்டு, வளர்ச்சி பெற்ற பல நிறு வனங்கள் வெளிநாடுகளிலும் இத்திட்டங்களை முதலீடு செய்து நிறைவேற்றுகின்றனர். CWFI சார்பில் திபெஞ்சன் சக்ரவர்த்தி, இடம் பெயரும் தொழிலாளர் நிலை குறித்த அறிக்கை சமர்ப்பித்து பேசி னார். AITUC கட்டுமான சங்க தலைவர்களும் பேசினார்கள். மூன்று அமர்வுகளிலும் வந்த கருத்துக்கள் அடிப்படை யில், பெண் தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனைகள், உடல் நலம், பாதுகாப்பு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்ச னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது எனவும், நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பொதுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹோசிமின்னைக் கண்டோம்
அக்டோபர் 10 அன்று வியட்நாம் விடுதலை பெற்ற 65வது ஆண்டு, காலையில் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வியட்நாமின் தந்தை, வியட்நாமின் வீர நாயகன் ஹோசிமின் துயிலகம் (MAUSOLEUM) சென்றோம். 1975-ல் 71 அடி உயர கட்டிடத்தில் தோழர் ஹோசிமின் உடல் பாதுகாப்பாக கடந்த 50 ஆண்டுகாலமாக மீளாத் தூக்கத்தில் இருந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புரட்சிகரமான பரவச உணர்வு களுடன், கரம் உயர்த்தி அவருக்கு வீர அஞ்சலி செலுத்தி னோம். பின்னர் அவர் குறித்த சிறிய வீடியோபடம் ஒன்றையும், 1954 முதல் 1969 வரை தங்கியிருந்த இரண்டு வீடுகளையும் ஜனாதிபதி மாளிகையையும் பார்வையிட்டோம். எளிமையாக வாழ்ந்து, 79 வயதில் மறைந்த தலைவர் ஹோசிமின் அவர்களுக்கென எந்த சொத்தும் இல்லை. வியட்நாமின் ஜனாதிபதியாக இருந்த அவர், வீட்டருகே உள்ள ஒரு குளத்தில் அவ்வப்போது தீனிபோட்டு வளர்த்த மீன்கள் தான் தனது சொத்து என்று கூறுவாராம்.
ஹனாயிலிருந்து 2 மணி நேர பஸ் பயணம் செய்து, பூர்வீகத் தலைநகரம் மற்றும் (NINH BINH) நீன் பீன் மலைக் குகைகளை கண்டு பிரமிப்படைந்தோம். மூன்று மணி நேரம், வியட்நாமின் பெண் ஒருவர் ஒரு சிறு படகில் 4 தோழர்களை ஏற்றிக் கொண்டு, 1000 மீட்டர், 400 மீட்டர், 150 மீட்டர் நீள மலைக் குகைகளை சுற்றிக் காண்பித்தார். நூற்றுக்கணக்கான பெண்கள் பயணிகளின் படகு சவாரியை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். விசைப் படகு கள் புகுத்தி, அரசு அவர்களின் வேலையை பறிக்கவில்லை. ஹனாயின் பழைய சிறைச்சாலை ஒன்றுக்கு சென்றி ருந்தோம். பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்கள், எப்படியெல்லாம் வியட்நாம் கைதிகளை கொடுமைப்படுத்தினார்கள்; குறிப்பாக புரட்சி வீரர்களை, பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஒரு தோழர் உட்பட பிரெஞ்சு ஏகாதி பத்தியவாதிகள் நடத்திய கொடுமையை விவரிக்கும் வகையில் உருவக் காட்சி அனைவரையும் திகைக்க வைத்தது. சோசலிச வியட்நாம் குடியரசில் தங்கிய ஆறுநாட்களில் அங்கு கிடைத்த அனுபவம் மிகவும் செழுமையானது; மன நிறைவை தந்தது.
கட்டுரையாளர் : துணைத்தலைவர்,
இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம்