tamilnadu

img

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை 

சென்னை 
வடகிழக்கு பருவமழை மற்றும் கடற்கரையோரப் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தலைநகர் சென்னைக்கு சனியன்று கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும் தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், குமரிக் கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளில் நாளை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.