tamilnadu

img

யுடிஎப் கூட்டணியிலிருந்து விலகும் கட்சிகள் மதச்சார்பற்ற அரசியலை ஏற்றால் பேசத்தயார்

திருவனந்தபுரம், மே 29- இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) முன்வைக்கும் மதச்சார்பற்ற அரசியலை அங்கீகரித்து ஐக்கிய ஜன நாயக முன்னணி (யுடிஎப்) யிலிருந்து விலகும் கட்சிகளுடனும், அணிகளுட னும் பேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது என கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  இதுகுறித்து தேசாபிமானி நாளிதழில் எழுதியுள்ள விரிவான கட்டு ரையில் அவர் மேலும் கூறியிருப்பதா வது: இப்போது இத்தகைய ஒரு விவாதம் எழவில்லை. ஆனாலும் எதிர்கால அரசியலில் யுடிஎப்-இல் வெடித்துச் சிதறலும், நெருக்கடியும் ஏற்பட்டு புதிய தளத்துக்கு இட்டுச் செல்லும். காங்கிரசும் பாஜகவும் நெருங்கிய உறவைக் ஏற்படுத்திக் கொண்டு, இடது முன்னணியை எதிர் கொள்ளத் தயாராகும். அதில் இருந்தெல்லாம் மீண்டு எல்டிஎப் வசம் தொடர் ஆட்சியை வழங்க அறி வார்ந்த கேரளம் தயாராகும் என அந்த கட்டுரையில் கொடியேரி பாலகிருஷ் ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எல்டிஎப் ஆட்சியின் சிறப்பு இந்த கால அளவில் எல்டிஎப்பிலும் சிபிஎம்மிலும் கருத்தியல், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான ஒற்றுமை நிலவுகிறது என்று கட்டுரை கூறுகிறது. கடந்த காலங்களில் சிபிஎம்மில்கூட பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அவை உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் முற்றிலும் தீர்க்கப்பட்டன.  இன்று முழுமையான ஒற்றுமையு டன் கட்சி முன்னேறுகிறது. அத னால்தான் கட்சி- ஆட்சித் தலைமைகள்  இரண்டு தட்டுகள் என்கிற நிலை இல்லை. ஒன்றுபட்ட புரிதலுடன் முன் னோக்கி செல்வது ஆட்சிக்கும் கட்சி க்கும் முன்னணிக்கும் பரஸ்பரம் வலு சேர்ப்பதாகும். இது மக்களின் அங்கீகாரத்தைப் பெற வழிவகுத்துள்ள தாகவும் கட்டுரையில் கொடியேரி குறிப்பிட்டுள்ளார்.