ரயில்வேத் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், கேரள மாநிலம் மஞ்சேஷ்வரம் ஸ்டேஷன் மாஸ்டர் பி.கே.உண்ணிகிருஷ்ணனை 55 வயதில் கட்டாய ஓய்வு அளித்து பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், டி.ஆர்.இயூ சார்பில் சென்னை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு உதவி பொதுச் செயலாளர் வி.ஹரிலால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், உதவி பொதுச் செயலாளர் பேபி ஷகிலா, சென்னை டிவிஷன் செயலாளர் பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.