tamilnadu

img

தில்லி: மீண்டும் அதே தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக  தீவிபத்து

தில்லியில் நேற்று தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்த அதே தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
வடக்கு தில்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் பலர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தீவிபத்து தொடா்பாக தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலையின் உரிமையாளா் ரெஹானை கைது செய்தனா். தில்லியில் இதுவரை நடைபெற்ற தீ விபத்துகளில் இரண்டாவது மோசமான தீ விபத்தாகும். 
இந்நிலையில், அனாஜ் மண்டியில் உள்ள அதே தொழிற்சாலையில் திங்கள்கிழமை மீண்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.