சித்ரதுர்கா, செப்.17- கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் டி.ஆர்.டி.ஓ.வால் செவ்வாயன்று காலை சுமார் 7 மணியளவில் இயக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டுத் தொடர்பை இழந்து ஜோடிச்சிக்கெனஹள்ளி என்ற இடத்தில் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. பெரிய வகை ஆளில்லா விமானமான இது நிலத்தில் விழுந்து நொறுங்கிய சத்தம் கேட்டு அங்கு விவசாயிகள் திரண்டனர். காலை நேரம் என்பதால் விவசாயிகள் பணிக்கு வராத நிலையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் விரைந்தனர்.