மும்பை, நவ.27- மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி முன்னணி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கவில்லை என கட்சியின் தஹானி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் நிகோலே கூறினார். கூட்டணிக்காக அழைப்பு விடுத்து நடத்திய எந்த ஒரு கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை. ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் அளிக்கப் பட்ட கடிதத்திலும் கையெழுத்திட வில்லை என வினோத் நிகோலே தெரி வித்தார். பாஜகவை அதிகாரத்திலிருந்து விலக்கி வைப்பது முக்கியமானது என்ப தால் புதிதாக அமைக்கப்படும் அமைச்ச ரவையை சிபிஎம் எதிர்க்கவில்லை என்பது மட்டுமே நிலைபாடு. இதன் பொருள் கொள்கை அளவிலான ஆதரவு என்பதோ, முழுமையான ஆதரவு என்பதோ அல்ல. பிரச்சனை அடிப்படையிலான ஆதரவு என்பதே ஆகும். இப்படி ஒரு நிலைபாடு எடுப்ப தன் மூலம் எக்காரணம் கொண்டும் பாஜக, சிவசேனா குறித்த மார்க்சிஸ்ட் கட்சியின் பார்வையில் மாற்றமில்லை எனவும் வினோத் நிகோலே கூறினார்.