tamilnadu

img

கோவிட்-19: சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக உயர்வு

சென்னையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,149 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 804 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. 12,757 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் 14,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 122 பேர் உயிரிழந்துள்ளனர்; 7,851 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 29 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 24 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 14 பேர் உயிரிழந்துள்ளனர்.