tamilnadu

img

மழையால் சென்னை, திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கனமழையைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
இதேபோல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ்  கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்த செய்யப்பட்ட தேர்வுகள் டிச.3ஆம் தேதி நடைபெறும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.