tamilnadu

img

பேஸ்புக் நிறுவனத்தில் பாஜக முகம்

2014 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியும், பாஜகவும் வெற்றி பெறுவதற்கு முந்தையநாள், இந்திய பேஸ்புக் பொதுக்கொள்கைத் தலைவரான அங்கி தாஸ்,இந்தியாவில் தனது சமூக ஊடக நிறுவன ஊழியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த குழுவில் ‘அவருடைய (மோடியினுடைய)  சமூக ஊடகப் பிரச்சாரத்திற்காக நாம் நெருப்பைப் பற்ற வைத்தோம். அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் நிச்சயம் வரலாறு’ என்று எழுதியிருந்தார். இந்த செய்தியுடன், 2012 மற்றும் 2014க்கு இடையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட பல பதிவுகளையும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கிறது. உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்ற பேஸ்புக் நிறுவனத்தின் உறுதிமொழியுடன் முரண்படுவதாக அந்தப் பதிவுகள் இருக்கின்றன.

பாஜக, குறிப்பாக மோடி, தேர்தல்ரீதியாகப் பயனடைந்த ஒவ்வொரு முறையும், நிறுவன ஊழியர்களின் உள்நுகர்விற்காக எழுதப்பட்ட தாஸின் பதிவுகளை ஆகஸ்ட் 30 அன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் சுட்டிக்காட்டியுள்ளது. 2012 அக்டோபரில், மோடியின் பாஜக அணிக்கான பயிற்சி குறித்து‘நமது குஜராத் பிரச்சாரத்தில் வெற்றி’என்று எழுதியிருந்த தாஸ், அந்தப் பிரச்சாரம் பேஸ்புக்கில் பத்து லட்சம்ரசிகர்களைச் சென்றடையும் நிலைக்குஅருகே உள்ளது என்றும் குறிப்பிட்டி ருந்தார்.அந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னர்,மோடி ஒரு தேசியத் தலைவராகக் கருதப்பட்டார். தேசிய அளவிலான பதவிக்கான பிரச்சாரம் முழு வீச்சில் தொடங்கப்பட்டது. மீண்டும் பயிற்சிகளையும், உதவிகளையும் பேஸ்புக் வழங்கியதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியிருக்கின்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தாஸின் பேஸ்புக் சகாவும், குடியரசுக் கட்சியைச் சார்ந்தவரும், பேஸ்புக்கின் உயர்மட்ட உலகளாவிய தேர்தல்அதிகாரியுமான கேட்டி ஹர்பத், 2013ஆம் ஆண்டு இந்த இரு பெண்கள் மற்றும் வருங்கால பிரதமர் இருக்கின்ற புகைப்படத்துடன் வெளியான உள்பதிவு செய்தியில் மோடியை இந்தியாவின் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் என்று தாஸ் வகைப்படுத்தியதாக எழுதியிருந்தார்.

மோடியை காங்கிரஸின் பிடியைமுடிவுக்குக் கொண்டுவந்த ‘வலிமையானவர்’ என்று தாஸ் புகழ்வதை மற்ற பதிவுகள் காட்டுகின்றன. 2014 தேர்தல்களுக்கு முன்னதாக, கட்சியின் பிரச்சாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்குத் தேவையான முக்கிய முன்னுரிமைகளைச் சேர்க்க வேண்டுமென்று பேஸ்புக் பல மாதங்களாக பாஜகவைவற்புறுத்தி வருவதாக அவர் எழுதியிருந்தார். ‘அவர்கள் இப்போது தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும்’ என்று அவர் எழுதினார். அந்த மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனம் அரசியலில் தன்னுடைய பயன்பாட்டை நிரூபிக்க ஆர்வமாக இருந்த2011ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கின்ஓர் அங்கமாக தாஸ் இருந்து வருவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை கூறுகிறது. ஆதரவாளர்களை அணிதிரட்டுவதற்கு தங்களுடைய மேடையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்த பயிற்சிகளை பல இந்தியஅரசியல் கட்சிகளுக்கு பேஸ்புக் நிறுவனம் வழங்கியது. அதன் ஒரு பகுதியாகவே, குஜராத் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியின் 2012
ஆம் ஆண்டு பிரச்சாரமும் இருந்தது.

வெறுக்கத்தக்க பேச்சுக்களை தங்களுடைய மேடையில் பேஸ்புக் கையாளுவது தொடர்பாக ஏற்கனவே நாட்டில்எழுந்திருக்கும் அரசியல் குரல்களின்மையத்தில் தாஸ் இருப்பதால், இப்போது வெளியாகி இருக்கின்ற இந்தபுதிய செய்தி மிகவும் முக்கியமானதாகிறது. தெலுங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினரான டி.ராஜா சிங்,பிற ஹிந்து தேசியவாதிகள் மற்றும்குழுக்களை தங்களுடைய மேடையில் இருந்து தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், ஆளும் கட்சியுடனான நிறுவனத்தின் உறவைச் சீரழித்து விடும் என்ற பயத்தில் இந்தஆண்டின் தொடக்கத்தில் தாஸ் இருந்ததாக ஆகஸ்ட் 14 அன்று வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான முந்தைய செய்தியில் கூறப்பட்டிருந்தது. 

ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளைச்சுட வேண்டும், இந்திய முஸ்லிம்கள் துரோகிகள் என்று கூறியும், மசூதிகளை இடிக்கப் போவதாக அச்சுறுத்தியும் முஸ்லிம்களை குறிவைத்து தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் கருத்துக்களை சிங் வெளியிட்டிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கள் அனைத்தும் பேஸ்புக்கின் விதிகளைத் தெளிவாக மீறியிருந்தாலும், அந்தப் பதிவுகள் ஆரம்பத்தில் நீக்கப்படவில்லை. அதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்திடம் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கருத்து தெரிவித்த பின்னரே அவை நீக்கப்பட்டன.

‘இழிவுபடுத்தப்பட்ட’ எதிர்க்கட்சிகள்
தங்களுடைய உள்செய்திகளில் எதிர்க்கட்சிகளை தாஸ் இழிவுபடுத்தியதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தி அறிக்கை கூறுகிறது. இந்திய தேசியகாங்கிரஸின் அதிகாரப்பூர்வ பக்கம் மோடியின் தனிப்பட்ட பக்கத்தை விடபேஸ்புக்கில் பெரிய அளவில் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்றுஒருவர் சுட்டிக்காட்டியபோது, ‘இந்திய தேசிய காங்கிரஸுடன் ஒப்பிட்டு அவரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். ஆஹா – என்னுடைய சார்பு காட்டப்படக்கூடாது!!!” என்று தாஸ் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

பாஜகவின்  தலைமையுடன் தனக்குநெருக்கமான உறவுகள் இருப்பதாக அந்த பதிவுகளில் அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. 2014 பொதுத்தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மோடியின்வெற்றி குறித்து பாஜகவிடம் இருந்ததேர்தல் கணிப்புகளை தன்னுடைய சகாக்களுடன் தாஸ் பகிர்ந்து கொண்டிருந்தார். பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் நெருங்கிய நண்பரிடமிருந்து அந்த தகவலைப் பெற்றதாக தாஸ் கூறியதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.பேஸ்புக் எவ்வாறாயினும், தாஸைஆதரித்து, சமூக ஊடக தளப் பதிவுகள் எவ்வித சார்புகளையும்  காட்டவில்லை என்று கூறியுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், ‘இந்தப் பதிவுகள் அவற்றிற்கான பொருளுக்கு முற்றிலும் மாறாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. எங்கள் தளத்தை பயன்படுத்துவதை ஆதரிக்கின்ற பேஸ்புக்கின் முயற்சிகளின் முழுநோக்கத்தை இந்திய அரசியல் தளத்தில் உள்ள கட்சிகளுடன் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம்’ என்று கூறினார்.வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் முதல் கட்டுரையைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தனக்கு கிடைத்த அச்சுறுத்தல்கள் குறித்து தெற்கு தில்லி காவல் நிலையத்தில் தாஸ் புகார் அளித்தார். அந்தப்புகாரில் சில டுவிட்டர் கணக்குகளை அடையாளம் காட்டி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கூறியிருந்தார். இந்திய முஸ்லிம்களை ‘சீரழிந்த சமூகம்’ என்று குறிப்பிட்டிருந்த பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்த
தற்காக அவர் தனது சகாக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், ஒரு சார்பு கொண்டிருப்பதாக வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, பேஸ்புக் அதிகாரிகளை வரவழைப்பது என்று தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்றக் குழு திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தில்லிசட்டமன்றக் குழு நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதுடன், இந்தஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ‘தில்லி கலவரங்களைத் திட்டமிடுவதில்’ இந்த சமூக ஊடக நிறுவனமோ அல்லது அதன்அதிகாரிகளோ பங்கு வகித்தார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறது.

நன்றி: தி வயர் இணைய இதழ், 

தமிழில்: தா.சந்திரகுரு