tamilnadu

img

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று...

மும்பை
பாலிவுட் என அழைக்கப்படும் இந்தி திரையுலகில் பழம்பெரும் நடிகராக உள்ள அமிதாப் பச்சனுக்கு (77) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் பரிசோதனை செய்யப்பட்ட பொழுது அவரது மகனும், முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போதைய நிலையில் இருவருக்கும் லேசான அறிகுறிகள் தான் எனவும், இருவரது உடல்நிலை சீராக உள்ளது என நானாவதி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள், நடிகைகள் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.  

;