ஹைதராபாத்,அக்.6- ஹைதராபாத் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளா னதில் இரண்டு பயிற்சி விமானிகள் பலியாகினர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 100 கி.மீ தூரத்தில் விகராபாத் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் பருத்தி வயல்வெளியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தது. இந்த விபத்தில் பயிற்சி விமானிகள் இருவரும் பலியாகினர். இதில் ஒருவர் பெண் ஆவார். இவர்கள் ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் மாணவர்கள். வயல்வெளி பகுதிகளில் காற்று பலமாக அடித்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.