tamilnadu

img

கோவை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஒருவர் கைது

கோவை பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாதம் 25-ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும் உறவினர்களும் குழந்தையை தேடி வந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில், 26-ம் தேதி காலையில் சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.


மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதியானது. குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(34) என்பவரை 6 நாட்களுக்குப் பிறகு இன்று போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சம்பவத்தன்று அவரது பாட்டியும் மரணமடைந்துள்ளதால் இந்த மரணத்திற்கும் சந்தோஷ் குமாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


;