தஞ்சாவூர் நவ.14- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செருவா விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.சடையப்பன், எஸ்.தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மையான மருத்துவமனையே தரத்தின் முதல்படி. தூய்மை பேணுவோம். சுகாதாரம் காப்போம் என வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள், மருத்துவ அலுவ லர்கள், பணியாளர்கள் அனைவரும் சுகாதார உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்.ரஞ்சித், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், மருத்துவ மல்லா மேற்பார்வையாளர் எஸ்.கண்ணன், சுகாதார ஆய்வா ளர்கள் டி.தவமணி, ஏ.ராம்குமார், சமூக சுகாதார செவிலி யர் டி.அமிர்த மோகனா, கண் மருத்துவ நுட்பநர் திரவியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.