தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சை பாலாஜி நகரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் தஞ்சை கோட்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சர வணன் தலைமை வகித்தார். மோகன், எம்.செந்தில், பிரபாகரன், கஸ்தூரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன்பேசினார். இதே போல் கும்பகோணத்தில் ரவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மணிகண்டன், பி.ஆர். சரவணன், கே.முத்துக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் சிறப் புரையாற்றினார். கூட்டங்களில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். 4 மணி நேர பணியும், ரூ 256 கூலியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.