தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசுக் கல்லூரி யில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். கால கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆர்.சரண்யா பேசினார். பேராசிரியர்கள் ராணி, பழனிவேலு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். முன்னதாக கௌரவ விரி வுரையாளர் உமா வரவேற் றார். நிறைவாக கௌரவ விரிவுரையாளர் ஜமுனா நன்றி கூறினார். பேச்சு, வினாடி- வினா போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசு வழங்கப் பட்டது. இதே போல் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா சென்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் கள் தினம் நடைபெற்றது. தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநிலத் துணை பொ துச் செயலாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து பேசினார். பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர்பிச்சை முன்னிலை வகித்தார். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்ஸ்ரீதர், பள்ளி அறங் காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக் கப்பள்ளியில் திருக்குறள் பேரவை சார்பில் மகளிர் விழா நடைபெற்றது. ஆசிரி யர் பயிற்றுநர் சாஜிதா பானு தலைமை வகித்தார். சத்யா வரவேற்றார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி முன்னிலை வகித்தார். தமுஎகச மாநில துணைச் செயலாளர் ஆலங் குடி ஆர்.நீலா சிறப்புரை யாற்றினார். பாக்கியலட்சுமி, நித்யா, வனராணி, பிரியா, உமா, ஆசிரியர் கவிதா உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். திருக்குறள் பேரவைச் செயலாளர் பேராசிரியர் புவ னேசுவரி நன்றி கூறினார். கும்பகோணம்: பாபநா சம் அருகே இராஜகிரி தான்ஸ்ரீ உபயதுல்லா மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பாபநாசம் அன்னை ஸ்ரீசாரதா மகளிர் மன்றம், லயன்ஸ் கிளப், மைக்ரோலேப் மற்றும் இராஜகிரியை சார்ந்த காசி மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பி லான முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை, ஆலோ சனை வழங்கப்பட்டது. குடந்தை, கோயம்புத்தூர் மருத்துவர்கள் மருத்துவம், ஆலோசனை வழங்கினர். சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் அரசுக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு கல்லூரி முதல் வர் லெட்சுமி தலைமை வகித்து பேசினார். ஊராட்சி தலைவர் வசந்தி ராஜேந்தி ரன், சென்னை ராணி மேரி கல்லூரி பேராசிரியை கிருத் திகா பெண்ணே விழித்தெழு என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் நாராயண சாமி, வடிவேலன், வினோத், சாந்தி, அனுசுயா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சசிக்குமார் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் மகளிர் தின விழா முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற் றது. குருகத்தி ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் முனைவர் வனிதா டேனியல் சிறப்புரையாற்றினார். தஞ்சை கலைமாமணி தேன் மொழி இராஜேந்திரனின் நாட்டுப்புற பாடல்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நடப்பாண்டில் ஓய்வு பெறவுள்ள பேராசிரியை முனைவர் மல்லிகா புண் ணியவதி கௌரவிக்கப் பட்டார். விழாவை பேராசிரி யைகள் கேரலின், திவ்யா, மதுமிதாஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.