தஞ்சாவூர், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் கொளக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது பூலாங்கொல்லை கிராமம். மாவட்ட எல்லைப்பகுதியான இக்கிரா மத்தில் 310 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் மாணவர்கள் உயர் வகுப்பு படிக்க தொலைதூர இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இவ்வழியாக பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள், பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலைகள் பல வருடங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளன. போதிய மாணவர்கள் இருக்கும் நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பெருமகளூர், பேரா வூரணி, அறந்தாங்கிக்கு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பகுதிநேர நியாயவிலைக்கடை மேலும், 247 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில், புதிதாக குடும்ப அட்டை கேட்டு 70 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனவே இங்கு பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்க வேண்டும். சுகாதார வளாகம் பராமரிப்பின்றி, பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். பெரும்பாலும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த ஏழை விவசாயத் தொழிலா ளர்கள் குடிசை வீடுகளில் தான் வசிக்கின்ற னர். அதுவும் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில் அனைத்தும் சேதமடைந்தன. அந்த குடிசை வீட்டில் தான் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இக்கிராம மக்கள் கூறுகையில், அரசே எங்களுக்கு வீடு கட்டித் தந்து, மின் இணைப்பும் தர வேண்டும். மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் தெரு விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றனர். நாகுடி தாய் வாய்க்காலின் பிரிவு வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித் துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மேலும் இடுகாடு, சுடுகாட்டில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பூலாங்கொல்லை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.