தஞ்சாவூர்,மார்ச்.18 – தஞ்சை அருகே பைக்கு கள் நேருக்கு நேர் மோதிய தில்,பெட்ரோல் டேங்க் தீப்பிடித்த விபத்தில், வங்கி அதிகாரி, மெக்கானிக் ஆகியோர் பலியானர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (30), மெக்கானிக். இவர் ராயர் தெருவில் மெக் கானிக் கடை வைத்துள்ளார். இவரது நண்பர் ஒரத்தநாடு கீழத்தோட்டத்தை சேர்ந்த வர் கணேசன், கொத்தனார். இருவரும் செவ்வாய்க்கிழ மை மாலை தஞ்சாவூருக்கு சென்று விட்டு, ஒரே பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தனர். பைக்கை கணேசன் ஓட்டியுள்ளார். இரவு 9.30 மணிக்கு பட்டுக்கோட்டை–தஞ்சை சாலையில்,மேல உளூர் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பட்டுக்கோட் டையை அடுத்த இரண்டாம் புலிக்காட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலம் ஓங்கல் பிரகாசம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (36), வேலை முடிந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டி ருந்தார். அப்போது பீரவின்குமார், கணேசன் இருவரும் வந்த டூ வீலர் நேருக்கு நேர் மோதி யது. இதில் கணேசன் பைக்கில் பெட்ரோல் டேங்க் திறந்ததால், பைக் தீப்பிடித்து எரிந்தது. இதில் கணேசன், ராஜேஷ் இருவர் மீதும் தீப் ப்பிடித்தது. சம்பவ இடத்தி லேயே ராஜேஷ் இறந்தார். இதில் பீரவின்குமார் படுகாய மடைந்து உயிருக்கு போ ராடிய நிலையில்,தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவ்விபத்தில் தீக்காய மடைந்த கணேசன், மருத்து வக்கல்லுாரி மருத்துவ மனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஒரத்தநாடு காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.