tamilnadu

நலத்திட்ட உதவி வழங்கல்

தஞ்சாவூர், ஜூன் 3-தஞ்சாவூரில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம்நடைபெற்றது. இதில் திருக்கானூர்பட்டி கிராமம் வல்லம்பகுதியை சேர்ந்த மணிகண்டம் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தமையால் அவரது மனைவி மனோகரி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலை, பட்டுக்கோட்டைஊராட்சி ஒன்றியம் அணைக்காடு ஊராட்சியில் தேசியஉறுதி திட்ட பணியின் போது மேரி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தமையால் அவரது கணவர் தைரியம்என்பவருக்கு ரூ.25 ஆயிரம் அரசு உதவி தொகையை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த 07.05.2019 அன்று தொட்டில் குழந்தை திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட 25 நாட்களான பெண் குழந்தையை அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கால மாதா தத்துநிறுவனத்திடம் ஆட்சியர் ஒப்படைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா, குழந்தைகள்பாதுகாப்பு அலுவலர் நடராஜன் பங்கேற்றனர்.

;