tamilnadu

துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் காவல் துறை விசாரணை 

 தஞ்சாவூர் டிச.12-  தஞ்சை தமிழ்ப் பல் கலைக்கழக துணைவேந்த ருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபர் குறித்து காவல்துறை யினர் விசாரித்து வரு கின்றனர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்க லைக்கழக துணைவேந் தர் கோ.பால சுப்பிரமணிய னுக்கு, கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு, முகவரி இல் லாமல் கடிதம் ஒன்று வந்துள் ளது. அத்துடன் இக்கடித்தின் நகல்கள், பாலசந்திரன், செந்தில்குமார், பணியாளர் சங்க தலைவர் மற்றும் செய லாளர், பாலசுப்ரமணியன், சுந்தரபாண்டியன், இளை யாப்பிள்ளை, ரவிவர்மன், ரவீந்திரன் மற்றும் இளங் கோவன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப் பட்டிருந்தது. இதையடுத்து, துணைவேந்தர் கோ.பால சுப்ரமணியன் தமிழ்ப் பல்க லைக்கழக காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், கடிதம் அனுப்பிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

;