tamilnadu

முன்னேற்பாடு இல்லாமல் மாற்றி விடப்பட்ட பேருந்து பல கிராம மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிப்பு

கும்பகோணம், ஜன.20- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் பேருந்து நிலை யத்திலிருந்து நாச்சியார் கோயிலுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரி மாணவர்க ளை அழைத்துச் செல்வ தற்காக நாச்சியார்கோவில் வரை இலவச பேருந்து காலை 8 மணிக்கு இயக்கப்பட்டது.  இந்நிலையில் பொங்கல் முடிந்து திங்கட்கிழமை பள்ளி திறப்பை முன்னிட்டு மாணவர்கள் வழக்கம் போல் காலை 8 மணிக்கு நாச்சியார் கோவில் திருநறையூர் கிருஷ்ணாபுரம் சாக் கோட்டை ஆகிய கிராமங்க ளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வ தற்காக பேருந்து நிறுத்தத் தில் காத்திருந்தனர்.  ஆனால் பேருந்து வராத தால் ஏமாற்றத்துடன் வீட்டி ற்கு திரும்பி சென்றனர். இது குறித்து மாணவர்களின் பெற் றோர்கள், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதி காரியிடம் தொலைபேசியில் கேட்ட பொழுது நாச்சியார் கோவிலுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வரும் பேருந்து சென்னைக்கு திருப்பப்பட்டு உள்ளதால் இன்று வர இயலாது என்றும், மாற்றுப் பேருந்து இல்லை எனவும் தெரிவித்து விட்டனர். இதனால் மாணவர்களுக்கு தேவை இல்லாத விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

;