tamilnadu

img

குடியரசு தினத்தன்று தஞ்சையில் டிராக்டர் பேரணி... விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவு....  

தஞ்சாவூர்:
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீர மோகன் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில், ‘போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஜனவரி 23 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகையில், தஞ்சையிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் சென்றுபங்கேற்பது, ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தேசியக் கொடிகளோடு தஞ்சையில் டிராக்டர் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் பரவலாக பெய்துள்ள கனமழையை பேரிடராக அறிவித்து பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், மற்ற பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்றார்போல் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். மேலும், தில்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகள் 20 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்காக சம்மன் அனுப்பி அச்சுறுத்துவதை வன்மையாக கண்டித்தும்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

;