கும்பகோணம்: தமிழக அரசின் முறைசாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில் கும்பகோணத்தில் பிப்.21(வெள்ளிக்கிழமை) ஒரு நாள் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய தொழிற்சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜெயபால் தெரிவிக்கையில், தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்-பெண் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்காக தொழிலாளர் நல வாரியம் சார்பில் புது பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனு சார்ந்த விண்ணப்பங்கள் பெற கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஒரு நாள் முகாம் நடைபெறுகிறது. எனவே கும்பகோணத்தைச் சுற்றியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் பிப்.21 அன்று காலை 10 மணிக்கு கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்வதற்கான உதவிக்கு கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தையோ மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு விபரங்களை அறிய கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.