தஞ்சாவூர் அக்.15- பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம்.கலிய பெருமாள் முன்னிலை வகித்தார். செயலாளர் வ.விவே கானந்தம் வரவேற்றார். இக்கூட்டத்தில், “திருவாரூர் -காரைக்குடி இடையே யான அகல ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட்டு களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் காலம் தாழ்த்தாமல் நிரந்தர அலுவலர்கள், பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காரைக்குடி - அறந்தாங்கி- பேராவூரணி -பட்டுக் கோட்டை -திருத்துறைப்பூண்டி - திருவாரூர் வழியாக சென்னைக்கு பகல் மற்றும் இரவு நேர விரைவு ரயில் சேவையை தொடங்க வேண்டும். அதுவரை தற்காலிக ஏற்பாடாக மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு சென்று வர இணைப்பு ரயில் வசதி செய்து தர வேண்டும். மேலும் ரயில்வே அமைச்சர், ரயில்வே போர்டு தலைவர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்பகுதி யிலுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கை களை நிறைவேற்றித் தர வலியுறுத்துவது எனவும், மேலும் மத்திய ரயில்வே அமைச்சருக்கு இது குறித்து தொடர்ந்து கடிதங்கள் மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டும்” என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் பி. சுந்தர்ராஜன், இரா.ராஜா ராமன், பி.சுப்பிரமணியன், ஜி.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தொழில்நுட்ப ஒருங்கிணைப்பா ளர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினார்