tamilnadu

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் கருவியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்: ஆட்சியர்

தஞ்சாவூர், ஆக.18- தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்ய ப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும்  தெர்மல் ஸ்கேனர் கருவியை கட்டாயம்  வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்து ள்ளார். “தஞ்சாவூர் மாவட்டத்தில், கொரோனா  நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்க ளுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மரு த்துவமனை, வல்லம் கொரோனா சிகிச்சை  மையம், கும்பகோணம் அன்னை பொறியி யல் கல்லூரி கொரோனா சிகிச்சை மையம்,  பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கொ ரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்க ளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா நோய்த்தொற்று அறி குறி உறுதி செய்யப்படுபவர்கள் அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றி தங்களின் வீடுக ளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. அவ்வாறு, வீட்டில் தங்களை தனி மைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சி மீட்டர் எனப்படும் பிராணவாயு அளவு கண்ட றியும் கருவி மற்றும் தெர்மல் ஸ்கேனர் எனப்படும் உடற்வெப்ப அளவு கண்டறியும் கருவி ஆகியவற்றை கட்டாயம் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை பயன்படுத்தி அவ்வபோது தங்கள் உடலின் பிராணவாயு அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பிராணவாயு அளவு குறையும்பட்சத்தில் அருகிலுள்ள அரசு மரு த்துவமனையை உடனடியாக அணுகிட வேண்டும். மேலும், பல்ஸ் ஆக்சிமீட்டர் கரு வியை பயன்படுத்தி வீட்டிலுள்ள வயது முதி ர்ந்தவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள் தங்கள் உடலின் பிராணவாயு அளவு குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருந்தகங்களில் பல்ஸ் ஆக்சிமீட்டர் கரு வியை அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்க செய்யக்கூடாது. அவ்வாறு விற்ப னை செய்யும் மருந்தகங்களின் மீது மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில் கடும் நடவடிக்கை எடு க்கப்படும்” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.