tamilnadu

img

திருவாரூா்- காரைக்குடி ரயில் தடத்தில் போதிய கேட் கீப்பா்களை நியமிக்க கோரிக்கை

தஞ்சாவூர். ஜன.21- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அருகே அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் ரயில் உபயோகிப்பா ளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. பட்டுக்கோட்டை ரயில் உப யோகிப்பாளர்கள் நலச்சங்கத் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் ஏ.அப்துல் ரெஜாக், சங்க ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.எம்.ராஃபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னக ரயில்வே சேலம் கோட்ட வர்த்தக உதவி மேலாளர் (ஓய்வு) எம்.ஷாஜஹான் ஆலோசனை கள் வழங்கினார். கூட்டத்தில், காரைக்குடி- திருவாரூர் வழித்தடத்தில் அதிராம்பட்டினம் வழி யாக சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்குதல், திருவாரூா்- பட்டுக் கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் போதிய கேட் கீப்பா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதிராம்பட்டினம் நஜ்முதீன், எஸ்.ஜெ.அப்துல் ஜலீல், முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹிம், பட்டுக்கோட்டை எம்.கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில், பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் வ.விவேகானந்தன் நன்றி கூறினார்.

;