tamilnadu

img

திருபுவனம் சோழன் பட்டு நெசவாளர்களுக்கு உபகரணம் வழங்கல்

கும்பகோணம், அக்.28- கும்பகோணம் அருகே உள்ள திருபுவ னத்தில் சோழன் பட்டு கூட்டுறவு சங்க அங்கத் தினர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 132 நெசவாளர்களுக்கு தங்கள் நெசவு தொழிலுக்கு தேவையான நவீன உப கரணமான லிப்ட் மெஷின் மின்சார உதவியுடன் இயக்குவதற்கு இலகுவாகவும் நெசவாளர்களுக்கு பணிச்சுமையை குறைத்து கால் வலி நெஞ்சு வலி போன்ற வற்றை வராமல் தடுப்பதற்கும் திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சுமார் 12,750 ரூபாய் மதிப்புள்ள லிப்ட் மிஷினை நெசவாளர்களுக்கு 1285 ரூபாய் மானிய விலையில் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சிங்.செல்வராஜ் வழங்கி னார். நிகழ்வின் போது மேலாளர் ராஜன், சங்கத் துணைத் தலைவர்  வைரவேல் சங்க இயக்குனர் ஆத்மநாதன் மற்றும் நெசவா ளர் வீராங்கண் உடனிருந்தனர். இது போன்று நெசவாளர்களின் வாழ்வாதாரத்தி ற்கும் குடும்பத்தை பாதுகாத்திடவும் நெசவாளர்களுக்கு பயன்படும் வகையில் நலத்திட்டங்களும் மழைக்காலங்களில் நெசவாளர்களுக்கு உதவித்தொகையும் வழங்கிட அரசிடம் கோரிக்கை வைத்துள் ளதாக சங்கத் தலைவர் சிங்.எஸ்.செல்வ ராஜ் தெரிவித்தார்.