tamilnadu

வேலைநிறுத்தம் வெற்றி  நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உற்பத்தியாளருக்கு கூலி உயர்வு

 கும்பகோணம், ஆக.6-  கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற பித்தளை குத்துவிளக்கு உற்பத்தி குடிசைத் தொழிலாக சுமார் 400 பட்டறைகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குத்துவிளக்கு தயாரிப்பில் ஈடு பட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பாலும் மூலப் பொருள்களின் விலை உயர்வால் தொழில் செய்ய முடியாமல் உள்ளதால் கூலி உயர்வு கேட்டு கடந்த ஜூலை 28-ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு பாத்திர வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 29ஆம் தேதி முதல் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்ட செய லாளர் சிஜெயபால் குத்துவிளக்கு உற்பத்தியாளர் வேலை நிறுத்தத்தால் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது வேலை இழந்து மிகவும் அசாதாரண சூழ்நிலையில் உள்ளனர். இந்நிலையில் உடனடியாக உற்பத்தி யாளர்களும் பாத்திர வியாபாரிகள் பேச்சுவார்த்தையின் மூலம் வேலைநிறுத்தத்தை முடிவு கொண்டு வந்து தொழிலைத் தொடங்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் நாச்சியார்கோயில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் நல குழுவினர் தலையிட்டு பாத்திர வியாபாரிகள் சங்கத்திற்கும் உற்பத்தியாளர் சங்கத் திற்கும் திங்களன்று பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது இதில் சுமூக முடிவு ஏற்பட்டதால் ஒரு வார காலமாக நடை பெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.