கும்பகோணம், நவ.20- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமலை ராஜன் ஆற்றில் கழிவு நீரை கொட்டுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ். பழனிவேல் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் மாத்தூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன வச திக்காக திருமலைராஜன் ஆறு ஓடுகிறது. இதில் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரு கிறார்கள். இப்பகுதியில் சரியான நேரத்திற்கு தண்ணீர் வராமல் ஆறுகளைத் தூர்வாரப்ப டாததால் தண்ணீர் வரத்து குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் நன்னிலம் சாலையில் கும்பகோணம் தாலுகா நாச்சி யார்கோவில் அருகே அமைந்துள்ள செருகுடி கிராமத்தின் வழியாக ஓடுகிற திருமலை ராஜன் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் எடுக் கப்படும் கழிவு நீர் லாரிகள் உட்பட பல்வேறு வாகனங்களில் கழிவுநீரை கொண்டு வந்து ஆற்றில் விடுவதினால் இப்பகுதிகள் மாசடை வதுடன் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி எந்த நேரமும் துர்நாற் றத்துடன் அங்கு குடியிருக்க முடியாமலும் சாலையைக் கடக்கும் பொழுது துர்நாற்றம் அடிக்கிறது. இது போன்று கழிவுநீரை லாரி யின் மூலம் கொட்டும் நபர்கள் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.