tamilnadu

img

வீடு தீப்பற்றி எரிந்து சாம்பல்

தஞ்சாவூர் டிச.5- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்காடு. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து.  இவரது மனைவி சுசீலா.  இவர்களுக்கு பிரபாகரன் (30), தனுஷ் (17) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பிரபாகரனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலை யில் புதன்கிழமை மாலை சுசீலா, தனுஷ் ஆகிய இரு வரும் இருந்த போது வீட்டின் முகப்பில் திடீரென புகை மூட்டமாக காணப்பட்டது. இதனையடுத்து இருவரும் வெளியே வந்து பார்த்த போது வீடு தீப்பற்றி எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.  மேலும் இவர்கள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். இருந்தும் தீயை அணைக்க முடியாமல் போனது. காற்று பலமாக வீசியதால் மளமளவென்று தீப்பற்றி எரிந்தது. இது குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர் கள் உடனடியாக வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இருந்தும் வீட்டிலிருந்த திரு மண சீர்வரிசை பொருட்கள் மற்றும் ஆவணங்கள் முற்றி லும் எரிந்து சாம்பலானது. இதுபற்றி அதிராம்பட்டினம் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.