tamilnadu

img

முப்பெரும் கவிஞர்கள் விழா

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எம்.என்.வி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தஞ்சை மாவட்டக் குழு மற்றும் புதுச்சேரி முப்பெரும் கவிஞர்கள் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் கவிஞர்கள் விழா மற்றும் மாவட்ட அளவிலான  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமுஎகச மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் முருக.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற்றார்.  மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் 16 கல்லூரிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் பங்குகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கி, தமுஎகச மாநிலப் பொருளாளர் சு.இராமச்சந்திரன் “பாவேந்தர் பாரதிதாசன்” என்ற தலைப்பிலும், தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் களப்பிரன், “மகாகவி பாரதி” என்ற தலைப்பிலும், புதுச்சேரி மக்கள் ஊழியர் தா.முருகன், “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.  போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் பி.ஆயிராசு, துணைத் தலை வர்கள் தி.தனபால், வல்லம் தாஜ்பால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் கே.பக்கிரிசாமி நன்றி கூறினார்.