tamilnadu

img

பன்முகத்தன்மை கொண்டவர்  மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம்

கும்பகோணம், மே 29-நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் அதிமுக வேட்பாளரை விட 2,61.314 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 1970 -1975 திருவிடைமருதூர் ஒன்றியம் சீனிவாசநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் மற்றும் ஊராட்சி ஒன்றியதுணை பெருந்தலைவராகவும் பணியாற்றி தொண்டு செய்தவர். தமிழக சட்டப்பேரவையில் இடைகால சபாநாயகராகவும் பணியாற்றியவர்.1977- 80, 1980-84, 1989-91, 1996 - 2001 ஆகிய காலங்களில்4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 1984-91 1991-96 2001-06,2006-11 கால கட்டத்தில் நான்கு முறை திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் 1981 முதல்1996 வரை சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினராக பணியாற்றியவர் .1972- 1975 , 2006 -2011 வரை திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம் நிர்வாக அறங்காவலராக ஆலய வளர்க் சிக்கு பணியாற்றியவர். 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒன்றியபெருந்தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக பணியாற்றினார். கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி துணைத் தலைவராக திறம்பட செயலாற்றினார்.2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் மாநாட்டில் உள்ளாட்சித்துறை கருத்தரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பெருமைக்குரியவர். 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைச்சிறந்த ஒன்றியபெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கேரள ஆளுநர் ஸ்ரீ பட்டிடம் ராஜீவ் காந்தி அகடாமி விருது பெற்றவர். 2010 ஆம் ஆண்டு இந்தியா டுடே பத்திரிகையில் இந்தியாவின் செயல் வீரர்களில் ஒருவராக பாராட்டைப் பெற்றவர்.தன் சொந்த கிராமமான கும்பகோணம் தாலுக்கா, சீனிவாசநல்லூர் ஊராட்சியை இந்திய அளவில் சிறந்த ஊராட்சியாக மாற்றி உத்தமர் காந்தி விருது மற்றும் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது ஆகிய விருதுகள் பெற வழிகாட்டியாக இருந்தவர். திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமம் அனைத்திற்கும் அடிப்படையான குடிநீர், சாலை,பாலங்கள் மற்றும் இணைப்பு சாலை களை ஏற்படுத்தி கிராமங்களை ஒன்றோடு ஒன்று இணைக்க முக்கியமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.அனைத்து கிராமங்களுக்கும் மகளிர் சுய உதவி குழு ஏற்படுத்தி வங்கி கடன் பெற உதவியவர்.பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தகாரராகவும், பன்முகத்தன்மையோடும் செயல்பட்ட ராமலிங்கம் தற்போது மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் உள்ளார். வரும் காலங்களில் தேர்தல் வாக்குறுதியாக வாக்களித்த டெல்டா பகுதியை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகவும், மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் திட்டத்தையும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க சூளுரையுடன் நாடாளுமன்றத்தில் வாதிட்டு பெற்றுத்தருவதாக உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.