tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி மழையால் திடீரென உள்வாங்கிய ஆபத்தான கிணறு மூடல்

தஞ்சாவூர், டிச.24- தஞ்சாவூர் அருகே வேங்க ராயன்குடிக்காடு கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள் வாங்கி கொண்டிருந்த 60 அடி ஆழ சமுதாய குடிநீர் கிணறு பாது காப்பாக மூடப்பட்டது. தஞ்சாவூர் அருகே வேங்கரா யன்குடிக்காடு தெற்கு தெருவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட போது, ஊராட்சி ஒன்றியம் சார்பில் சமுதாய குடிநீர் கிணறு வெட்டப்பட்டது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றின் மேல்பகுதி சிமெண்ட் கொண்டு பாதுகாப்பாக சுவர் எழுப்பப் பட்டது. காலப்போக்கில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், குடிநீர் குழாய் வழியாக வீடுகளுக்கு விநியோகம் செய் யப்பட்டு வருகிறது. இதனால் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்காமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக கிணற்றை சுற்றி பூமி உள் வாங்கி வந்தது. இதனால் அருகில் குடியிருந்தவர்கள் அச்சமடைந்த னர். பொதுமக்கள் அன்றாடம் இந்த கிணறு வழியாக சென்று வருவதாலும், குழந்தைகள் விளையாடும் இடம் அருகே கிணறு இருப்பதால், கிணறு உள்வாங்கும் இடத்தின் அருகே குழந்தைகள் விழுந்து விட வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தீக்கதிர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சி யர் ம.கோவிந்தராவ் உத்தரவின் படி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் எஸ்.பிரபாகரன் அறிவுரையின்படி ஊராட்சி ஒன் றிய பொறியாளர் மணிகண்டன், மேற்பார்வையாளர்கள் உமா மகேஸ்வரி, ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் எஸ்.வனிதா ஆகியோர் கிணற்றை பார்வையிட்டு, பொக்லின் இயந் திரத்தின் உதவியோடு கிணற்றின் சிமெண்ட் சுவரை இடித்து பின்னர் நான்கு லாரி மண் கொண்டு கிணற்றுக்குள் கொட்டி பாது காப்பாக மூடினர். பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட கிணற்றை மூட நடவ டிக்கை எடுத்த மாவட்ட நிர்வா கத்துக்கும், இதனை செய்தி யாக வெளியிட்ட தீக்கதிர் நாளித ழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும், கிணற்றை செம்மண் கொண்டு மூடப்பட்டுள்ளதால், மீண்டும் கிணறு உள்வாங்கும் நிலை ஏற்படலாம். எனவே மண் கொட்டியபிறகு மேல்பகுதியில் சிமெண்ட் கான்கிரீட்டால் சமதளம் அமைக்க வேண்டும்” எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.