tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 23-ஆவது நாளாக தொடர் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 14- தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை யில் சனிக்கிழமை அன்று 23 ஆவது நாளாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஷாகின்பாக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தினசரி நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என திரளாக பங்கேற்கிறார்கள். சாத்வீகமான எழுச்சி மிக்க போராட்டம் அமைதி வழியில் கண்ணியமாக நடத்தப்படுகிறது. சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தினசரி வந்து போராட்டம் வெற்றி பெற ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார்கள். பங்கேற்க வருபவர்கள், ஆதரவு தெரிவித்து பேச வரும் பிரமுகர்க ளுக்கு விதைப்பந்து வழங்கி சுற்றுப்பு றச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்தில் மக்கள் ஒற்றுமை மேடை அழைப்பு விடுத்துள்ள மார்ச் 17, காலை 10 மணி முதல் 18 காலை 10 மணிவரை 24 மணி நேர தொடர் இருப்பு போரட்டம் மிக சக்தியாக நடைபெறவுள்ளது. அனைவரும் பங்கேற்க ஷாகின் பாக் ஏற்பாட்டா ளர்களும் உறுதி ஏற்றுள்ளனர். காத்தி ருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோக ரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.

;