tamilnadu

img

தஞ்சாவூர்:சாலை விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சையில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 18 பேர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


;