tamilnadu

ஆலய இரவுக் காவலர் பணியிடம்  

 

தஞ்சாவூர், ஜன.19- தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட சுமார் 100 ஆலயங்களில், காலியாக உள்ள இரவு காவல் பணிக்கு, உடல் திறன் உள்ள 62 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை சிறப்பு காவலர் களாக பணி நியமனம் செய்ய உத்தே சிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ 7,300 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.  எனவே விருப்பமுள்ளோர் உரிய சான்றுடன் உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில், நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு, அலுவலக நாட்களில் வந்து கலந்து கொள்ளும்படி” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வ ரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;