தஞ்சாவூர், பிப்.8- தஞ்சையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்ற பெருவு டையார் கோவில் திருகுடமுழுக்கு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். சரவணவேல் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட மருத்துவர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கொண்ட குழுவினர் 5 அதிநவீன ஆம்புலன்ஸ்களுடன், 108 மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவக் குழுவி னருடன் ஒருங்கிணைந்து முதலுதவி மருத்துவ முகாம் பிப்.1-5 வரை, ஏற்பாடு செய்திருந்தனர். இம்முதலுதவி முகாமில் பலர் சிகிச்சை பெற்றனர். இப்பணியினை பாராட்டி தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், தஞ்சை மீனாட்சி மருத்துவ மனைக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.