tamilnadu

தஞ்சை பேருந்து நிலையம்  தற்காலிக இடமாற்றம்

 தஞ்சாவூர், செப்.7- ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவை யாறு செல்லும் பேருந்து நிலையம் ஆகியவை புதிதாக மறுகட்டுமானம் செய்யப்படவுள்ளது. அதனால், தஞ்சா வூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு செல்லும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் 8-ம் தேதி முதல் தஞ்சாவூர் காசி பிள்ளை யார் கோயில் தெரு அரசு போக்குவரத்து கழகம் அருகாமை யில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலை யத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.  எனவே, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு செல்லும் பேருந்து நிலையங்களை பயன் படுத்தும் பொதுமக்கள் காசி பிள்ளையார் கோவில் தெரு வில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சி யர் கேட்டுக் கொண்டுள்ளார்.