tamilnadu

img

தஞ்சை: மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலி

தஞ்சை திருவையாறு அருகே தனியார் பேருந்து மீது மின் கம்பி உரசியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை திருவையாறு கண்டியூர் சாலையில் வரகூர் அருகே தனியார் பேருந்து மீது மின்கம்பி உரசியது. இந்த விபத்தில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 

;