tamilnadu

தஞ்சை: தலா 7 ஒன்றியங்களில் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல்

தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு கட்டங்க ளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களை மாநில தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எல். சுப்பிரமணியன் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:  தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கு முதற்கட்டமாக டிச.27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.  இதில் முதற்கட்டமாக அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், திருவை யாறு ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடை பெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் 30-ஆம் தேதி மதுக்கூர், ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர், திருவோணம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற வுள்ளது.
5,462 பதவிகளுக்கு தேர்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 5,462 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ளன. இதில், 589 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கும், இந்த ஊராட்சிகளில் உள்ள 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 276 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூர் ஒன்றியத்தில் 29 உறுப்பினர் பதவிக்கும், திருவையாறு ஒன்றியத்தில் 18 உறுப்பினர் பதவி, பூதலூர் ஒன்றியத்தில் 16 உறுப்பினர் பதவி, திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 22 உறுப்பினர் பதவி, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 17 உறுப்பினர் பதவி, பாபநாசம் ஒன்றியத்தில் 21 உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 17 உறுப்பினர் பதவிகளுக்கும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் 31 உறுப்பினர் பதவி, திருவோணம் ஒன்றியத்தில் 15 உறுப்பினர் பதவி, கும்பகோணம் ஒன்றியத்தில் 27 உறுப்பினர் பதவி, பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 19 உறுப்பினர் பதவி, மதுக்கூர் ஒன்றியத்தில் 13 உறுப்பினர் பதவி, பேராவூரணி ஒன்றியத்தில் 15 உறுப்பினர் பதவி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 16 உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதே போல, மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் 28 வார்டு உறுப்பினர் பதவி கள் உள்ளன. மாவட்டத்தில் ஊரகப் பகுதிக ளில் மொத்தமுள்ள 5,462 பதவிகளுக் கும் இத்தேர்தல் நடைபெறவுள்ளது.