தஞ்சாவூர் டிச.14- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் கோரியுள்ளார். தஞ்சாவூரில் சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் பெ.மணியரசன் கூறியதாவது: தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும் வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகின்றனர். எனவே, தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்கா தீர்கள்- திரும்பிப் போங்கள் என்று வணக்கம் தெரிவித்து வேண்டுகோள் வைக்கும் மனிதச் சுவர் போராட்டத்தை டிச.20-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. தமிழகத்தில் மட்டும் 95 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் நுழைவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கையாண்டு வருகிறது. எனவே மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கர்நாடகம், குஜராத் மாநிலங்க ளைப் போல் மத்திய அரசு அலுவல கங்களில் 90 சதவீதம் மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் விதமாக, தமிழ கத்துக்கு வரும் வடமாநிலத்தவர்க ளுக்கு நாம் வீடுகளோ, கடைகளை வாடகைக்கு வழங்கக் கூடாது. வடமாநி லத்தவர்களின் கடைகளில் நாம் பொ ருட்களை வாங்காமல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட வேண்டும். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநில முதல் வர்கள் அறிவித்தது போல், தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும் என்றார். அப்போது, மாவட்டச் செயலா ளர் நா.வைகறை, தலைமைக் குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.