tamilnadu

img

மார்க்சிஸ்ட் இதழ் சந்தா வழங்கல்

தஞ்சாவூர், நவ.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி யுமான, மறைந்த தோழர் கோ. வீரய்யன் முதலாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் மார்க்சிஸ்ட் மாத இதழ் சந்தா வழங்கும் சிறப்பு  பேரவை கூட்டம் திங்கட்கிழமை யன்று மாலை தஞ்சாவூரில் நடை பெற்றது. இப்பேரவைக் கூட்டத்தி ற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டச் செயலா ளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரிய ருமான மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.  இக்கூட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், கே.பக்கிரிசாமி, சின்னை.பாண்டி யன், சி.ஜெயபால், பி.செந்தில் குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ் குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, கே.அருளரசன், தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், மாநகரக்குழ, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சியினர், பல்வேறு அரங்கத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் மாத இதழுக்கு 274 சந்தாவினை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாநி லச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினார்.